/* */

நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தடுப்பூசி சான்று கட்டாயம்: ஆட்சியர் தகவல்

நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வர கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் தேவையில்லை. 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் கலெக்டர்.

HIGHLIGHTS

நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு  தடுப்பூசி சான்று கட்டாயம்: ஆட்சியர் தகவல்
X

நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா.

நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்; பந்தலூர், கூடலூர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பந்தலூரில் 77 முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. இரவு நேரங்களில் மழை அதிகமானால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு குழு மூலம் பொதுமக்களை முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நீலகிரியில் இதுவரை வீடு, பயிர் சேதம் இல்லை. கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வர கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் தேவையில்லை. ஆனால், 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

சோதனைச் சாவடிகளில் சரிபார்த்த பின்னர் அனுமதிக்கப்படும். நீலகிரியில் முதல் டோஸ் 99 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டு உள்ளது. கொரோனா பாதித்து 90 நாட்கள் பூர்த்தி அடையாத நபர்களுக்கு குறிப்பிட்ட நாட்களுக்குள் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் 2-வது டோஸ் செலுத்தும் பணி 50 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. நீலகிரியில் முதல் டோஸ் செலுத்தி 2-வது டோஸ் போட குறிப்பிட்ட நாட்களாகியும் 84 ஆயிரம் பேர் செலுத்தாமல் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 18 Oct 2021 9:57 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  2. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  3. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  5. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  7. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  8. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை
  9. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  10. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்