உதகை ஊராட்சி பகுதிகளில் முகாம்: ஆர்வமுடன் ஊசி போட்டுக்கொண்ட மக்கள்

உதகை ஊராட்சி பகுதிகளில்  முகாம்: ஆர்வமுடன் ஊசி போட்டுக்கொண்ட மக்கள்

உதகை அருகே உள்ள உல்லத்தி ஊராட்சியில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 

நீலகிரி மாவட்டத்தில், அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, உதகை அருகே உள்ள உல்லத்தி ஊராட்சியில் 200 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இந்த முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று, காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

இதே ஊராட்சியில் கல்லட்டி, சக்தி நகர், ஏக்குணி, மேலூர், காந்திநகர், அண்ணா நகர் பகுதிகளில் கோவிஷீல்டு முதல் மற்றும் 2 ம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Tags

Next Story