/* */

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: ஊட்டியில் வேட்பாளர்களுடன் ஆலோசனை

தேர்தல்பிரசாரத்துக்கு 20 பேர் குழுக்களாக செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளதுவாக்கு கேட்டு சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டக்கூடாது

HIGHLIGHTS

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: ஊட்டியில்  வேட்பாளர்களுடன் ஆலோசனை
X

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றுவது குறித்து உதகை நகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நகர்மன்ற கூட்டரங்கில் நடந்தது.

கூட்டத்துக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் ஆணையாளர் காந்திராஜ் தலைமை தாங்கி பேசியதாவது:- வாக்குச்சாவடிக்குள் முகவர்கள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. வாக்காளர்களை எந்த ஒரு சின்னத்திலும் வாக்களிக்க தூண்டக் கூடாது. கூட்டரங்கம் மற்றும் திறந்த வெளியில் கூட்டம் நடத்தினால் 50 சதவீதம் பேர் மட்டும் கலந்து கொள்ள வேண்டும்.

தேர்தல் பிரசாரத்துக்கு 20 பேர் குழுக்களாக செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது. வாக்கு கேட்டு சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டக்கூடாது. வேட்பாளர்கள் வழங்கும் பூத் சிலிப்பில் கட்சி சின்னமோ அல்லது வேட்பாளர் பெயரோ இடம்பெறக்கூடாது.தாங்கள் வாக்கு சேகரிக்கும் போது, சக வேட்பாளர்கள் குறித்து தவறான எந்த ஒரு அறிவிப்பையும் அச்சிட்டோ அல்லது எழுதியோ வெளியிடக்கூடாது என்றார். கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் மற்றும் வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 9 Feb 2022 10:06 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  2. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  3. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  4. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
  5. செங்கம்
    செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆம்லா சாறு: இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அருமருந்து
  7. செய்யாறு
    செய்யாறு அருகே நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு
  8. தொண்டாமுத்தூர்
    வெள்ளியங்கிரி மலையில் மூச்சுத்திணறல் காரணமாக பக்தர் உயிரிழப்பு
  9. இந்தியா
    ரூ.600 கோடி போதை பொருளுடன் பாகிஸ்தானில் இருந்து வந்த படகு பறிமுதல்
  10. ஈரோடு
    பவானி ஆறு வறண்டதால் ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்...