/* */

உதகையில் அனுமதியின்றி பாறைகள் உடைப்பு: போலீசார் வழக்கு பதிவு

உதகையில் அனுமதியின்றி பாறைகளை உடைத்த விவசாயி மீது புதுமந்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்

HIGHLIGHTS

உதகையில் அனுமதியின்றி பாறைகள் உடைப்பு: போலீசார் வழக்கு பதிவு
X

ஊட்டியில் அனுமதியின்றி உடைக்கப்பட்ட பாறைகள்.

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க பாறைகள் உடைக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. கட்டுமான பணியின் போது பாறைகளை உடைக்க வருவாய் துறையிடம் அனுமதி பெற வேண்டும்.

ஊட்டி தாலுக்காவுக்கு உட்பட்ட கோழிப்பண்ணை பகுதியில் பட்டா நிலம் மற்றும் அரசு நிலத்தில் தடையை மீறி பாறைகள் உடைக்கப்பட்டதாக புகார் வந்தது.

உதகை ஊரக கிராம நிர்வாக அலுவலர் பிரீத்தா தணிக்கையில் ஈடுபட்டு இருந்த போது, பாறைகள் வெடிமருந்து பயன்படுத்தி கள்ளத்தனமாக 2,500 கற்கள் உடைக்கப்பட்டு மலைச்சரிவில் வாகனங்கள் செல்ல முன் அனுமதியின்றி மண் சாலையில் கற்களால் பாதை அமைக்கப்பட்டிருந்தது.

வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தொடர் விசாரணையில் பட்டா நில உரிமையாளர் கோழிப்பண்ணை பகுதியை சேர்ந்த கோபால் அனுமதியின்றி பாறைகளை உடைத்து அரசு சொத்துக்களை சேதப்படுத்தியது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் பிரீத்தா கொடுத்த புகாரின் அடிப்படையில் ஊட்டி புதுமந்து போலீசார் விவசாயி கோபால் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Updated On: 23 Jan 2022 1:24 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  2. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  3. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  4. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  5. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  6. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  7. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  9. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  10. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...