/* */

உதகை நகராட்சி: அக்.,8 க்குள் கடை வாடகை செலுத்த ஆணையாளர் உத்தரவு

உதகை மார்க்கெட்டில் இதுவரை வாடகை செலுத்தாமல் உள்ள 183 கடைகள் 25 சதவீத வாடகை செலுத்தாவிடில் கடைகள் ஏலம் விடப்படும் என ஆணையாளர் தகவல்.

HIGHLIGHTS

உதகை நகராட்சி: அக்.,8 க்குள் கடை வாடகை செலுத்த ஆணையாளர் உத்தரவு
X

உதகை நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி.

உதகை நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

உதகை நகராட்சி மார்க்கெட் மற்றும் வெளிப்புறப் பகுதிகளில் வாடகை செலுத்தாத 757 கடைகளுக்கு கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி நகராட்சி மூலம் சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. வாடகை செலுத்தாததால் நகராட்சிக்கு ரூ.35 கோடி பாக்கி இருந்தது. சீல் வைத்த பின்னர் இதுவரை ரூ.13 கோடியே 35 லட்சம் கோடி நிலுவைத் தொகை வசூலாகி இருக்கிறது.

கடைக்காரர்கள் 25 சதவீதம், 50 சதவீதம், 75 சதவீதம் என வாடகையை 480 கடை உரிமையாளர்கள் செலுத்தி உள்ளனர். நிலுவைத் தொகையை 100 சதவீதம் 94 கடைக்காரர்கள் செலுத்தி இருக்கின்றனர். சீல் வைத்தும் 183 கடைகள் இதுவரை வாடகை செலுத்தவில்லை.

ஏற்கனவே ஒரு மாதம் கால அவகாசம் அளித்தும் வாடகை செலுத்தாததால், அந்த கடைகள் மறு ஏலம் விடப்படும். இதை தவிர்க்க வருகிற 8-ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. அதிலும் வாடகை செலுத்தாவிட்டால் அந்த கடைகள் மறு ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும்.

பொருட்களை காலி செய்து, ஏலம் மூலம் மற்றவர்களுக்கு கொடுக்கப்படும். நிலுவைத் தொகை வசூலிக்கப்பட்டதை தொடர்ந்து நகராட்சியில் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ரூ.97 லட்சம் மதிப்பில் பண பலன்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் கூறினார். செய்தியாளர்களின் சந்திப்பின்போது நகராட்சி வருவாய் அலுவலர் பிரான்சிஸ் உடனிருந்தார்.

Updated On: 30 Sep 2021 9:23 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  2. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  3. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  4. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  5. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  8. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  9. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை