/* */

உதகை: கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எம்எல்ஏ ஆய்வு

மழை நீடித்தால் பொதுமக்களை முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

உதகை: கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்  எம்எல்ஏ ஆய்வு
X

மழையால் சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ.  

நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் உதகை அருகே உள்ள காந்தல் பகுதியில் தாழ்வான இடங்களில் உள்ள 30-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்ற தீயணைப்பு துறையினர் மழைநீர் புகுந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து இன்று காலை காந்தல் பகுதியில் கன மழையால் பாதிப்படைந்த பகுதிகளை உதகை சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் மற்றும் நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி ஆகியோர் மழைநீர் செல்லக்கூடிய கால்வாய்களை தூர்வாரும் பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

கனமழையால் காந்தல் குடியிருப்பு பகுதிகளுக்குள் தேக்கமடைந்த குப்பை கழிவுகள் மற்றும் சேறு சகதிகளை அகற்றும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், கனமழையின் தாக்கம் நீடித்தால் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு பொதுமக்களை தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On: 18 Nov 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.