/* */

அதிமுக அவைத் தலைவர் மறைவிற்கு நீலகிரி மாவட்டம் முழுவதும் அஞ்சலி

அதிமுகவின் அவைத் தலைவர் மதுசூதனன் இறப்பிற்கு நீலகிரி மாவட்டம் முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

அதிமுக அவைத் தலைவர் மறைவிற்கு நீலகிரி மாவட்டம் முழுவதும் அஞ்சலி
X

உதகை காபி ஹவுஸ் சந்திப்பில் மறைந்த அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனனுக்கு அஞ்சலி செலுத்திய அதிமுகவினர்.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு அதிமுக மட்டுமல்லாமல் பல்வேறு கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

உதகை காபி ஹவுஸ் சந்திப்பில் மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் கட்சியின் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் கலந்து கொண்டு மறைந்த அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனனுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த அஞ்சலி நிகழ்ச்சியின் போது அதிமுகவின் கட்சியில் அவைத்தலைவர் மதுசூதனன் ஆற்றிய பணிகள் குறித்து விளக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதிமுக தலைமை உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் அதிமுக கொடி கம்பங்களில் 3 நாள் அரை கம்பத்தில் கொடி இருந்து துக்கம் அனுசரிக்கப்படவுள்ளது.

Updated On: 6 Aug 2021 7:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  2. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  3. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  6. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  8. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  9. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  10. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!