உதகையில் நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

உதகையில் நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
X
உதகையில் நாளை, மின் நுகர்வோர், மின்சாரம் சம்மந்தப்பட்ட குறைகளை நேரில் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நீலகிரி மின்பகிர்மான வட்டம் சார்பில், மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நாளை காலை 11 மணி முதல், மதியம் 12.30 மணி வரை உதகை குன்னூர் சாலையில் உள்ள ஆவின் வளாகத்தில் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

கூட்டத்துக்கு நீலகிரி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் வாசுநாயர் பிரேம்குமார் தலைமை தாங்குகிறார். இதில் உதகை கமர்சியல் சாலை, லேக்வியூ, எட்டின்ஸ் சாலை, தமிழகம், ஆஸ்பத்திரி சாலை, தலைகுந்தா, தும்மனட்டி, தேனாடுகம்பை, பைக்காரா, எம்.பாலாடா, எல்லநள்ளி பிரிவு பகுதியை சேர்ந்த மின் நுகர்வோர்கள் மின்சாரம் சம்மந்தப்பட்ட குறைகளை நேரில் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!