/* */

உதகை சாலையில் உலா வந்த ஒற்றை காட்டு யானை; வாகன ஒட்டிகள் அச்சம்

உதகையிலிருந்து முதுமலை செல்லும் சாலையில் ஒற்றை காட்டு யானை உலா வந்ததால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

உதகை சாலையில் உலா வந்த ஒற்றை காட்டு யானை; வாகன ஒட்டிகள் அச்சம்
X

சாலையில் உலா வந்த ஒற்றை காட்டு யானை.

நீலகிரி மாவட்டம், உதகையிலிருந்து முதுமலை செல்லும் கல்லட்டி மலைப்பாதை வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படும்.

குறிப்பாக இரவு 7 மணிக்கு மேல் யானைகளின் நடமாட்டம் சர்வசாதாரணமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் கவனமுடன் வாகனங்களை இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் இரவு சுமார் 7 மணி அளவில் பணிக்கு சென்று தொழிலாளர்கள் வீடு திரும்பும்போது, ஒற்றை காட்டு யானை சர்வசாதாரணமாக சாலையில் நடந்து சென்றதைக்கண்ட வாகன ஓட்டிகள், தொழிலாளர்கள் அச்சமடைந்தனர்.

நீண்ட நேரத்திற்கு பின் யானை வனப் பகுதிக்குள் சென்றவுடன் வாகன ஓட்டிகள் சாலையை கடந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 29 Aug 2021 2:30 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?