/* */

உதகையில் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்த பின், தொழிலாளர்களின் போராட்டம் கைவிடப்பட்டது.

HIGHLIGHTS

உதகையில் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்
X

 போராட்டத்தில் ஈடுபட்ட, உதகை மகாலிங்கா கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை தொழிலாளர்கள்.

நீலகிரி மாவட்டம் பாலகொலா பகுதியில், மகாலிங்கா கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் தொழிலாளர்கள் 150 பேர் பணிபுரிந்து வருகின்றனர். தொழிற்சாலை நிர்வாகம், தொழிலாளர்களுக்கு வேலை வழங்காததால் தொழிலாளார்கள் ஆவேசம் அடைந்தனர்.

தொழிற்சாலைக்கு, பச்சை தேயிலை வரத்து குறைந்ததால் வேலையில்லை என்று நிர்வாகம் கூறியது. இதனால் தினமும் வேலை வழங்கக்கோரி, தேயிலை தொழிற்சாலை அருகே சாலை மறியலில் ஈடுபட முயற்சித்தனர்.

லவ்டேல் போலீசார், போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களிடம் மற்றும் தொழிற்சாலை நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தனர். பின்னர் தொழிலாளர்கள் போராட்டம் கைவிடப்பட்டது.

Updated On: 19 Jan 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!