/* */

பூச்சி, நோய் பாதிப்புகள் குறித்து தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் ஆய்வு

பூச்சி மற்றும் நோய் பாதிப்புகள் குறித்து உதகை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி ராஜா தலைமையில் ஆய்வு நடந்தது.

HIGHLIGHTS

பூச்சி, நோய் பாதிப்புகள் குறித்து தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் ஆய்வு
X

ஆய்வில் ஈடுபட்ட தோட்டக்கலை ஆராய்ச்சியாளர்கள். 

குன்னூர் வட்டார தோட்டக்கலைத்துறையின் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் தோட்டக்கலை உதவி இயக்குனர் பெபிதா உத்தரவின்படி விஞ்ஞானி மற்றும் விரிவாக்க அலுவலர்களின் கூட்டுக்குழு ஆய்வு நடந்தது. இதன் முக்கிய நோக்கம், இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் காந்தி பேட்டை, தாம்பட்டி, கொல்லிமலை பகுதிகளில் இயற்கை வேளாண்மை செய்து வரும் விவசாயிகளின் விளைநிலங்களில் பூச்சி மற்றும் நோய் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தனர். உதகை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி ராஜா தலைமையில் வேளாண்மை விரிவாக்க அலுவலர்கள் இணைந்து இந்த ஆய்வினை மேற்கொண்டனர்.

அதற்கான தீர்வு இயற்கை இடு பொருட்களின் மூலம் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்பட்டது. விஞ்ஞானி விவசாயிகளின் தோட்டத்துக்கு நேரடியாக வந்து ஆய்வு செய்து பிரச்சனைக்கான தீர்வு அளித்தது, விவசாயிகளுக்கு மேலும் ஊக்கம் அளித்தனர். ஆய்வின்போது உதவி தொழில்நுட்ப மேலாளர் ஜான் போஸ்கோ, அபினேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 26 Jan 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது