Begin typing your search above and press return to search.
விபரீதத்தில் முடிந்த டிவி சேனல் மாற்றும் சண்டை
உதகை அருகே டிவி பார்க்கும் பொழுது அக்கா தம்பியிடையே சேனல் மாற்றுவதில் ஏற்பட்ட சண்டையில் விஷமருந்திய மாணவன்
HIGHLIGHTS
உதகை அருகே அச்சனக்கல் கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 47), விவசாயி. இவரது மகன் மனோஜ்குமார் (13) 8-ம் வகுப்பு படித்து வந்தார். மனோஜ்குமார் தனது வீட்டில் டிவி பார்க்கும்போது, மற்ற சேனல் வைக்க அக்காவுடன் சண்டை போட்டு வந்தார். சேனல் மாற்றுவதற்கு அக்கா ரிமோட் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மனோஜ்குமார் விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார்.
உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே மனோஜ்குமார் பரிதாபமாக இறந்தார். பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து கேத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.