/* */

சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த இளைஞனுக்கு 30 ஆண்டு சிறை தண்டனை

உதகை நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கு விசாரணையில், சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த இளைஞனுக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த இளைஞனுக்கு 30 ஆண்டு சிறை தண்டனை
X

தண்டனை விதிக்கப்பட்டவர். 

நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே மாவனல்லா குரூப் ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (23). கடந்த 11.3.2018 அன்று பழங்குடியின சிறுமியை, வனப்பகுதிக்குள் அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்தார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், கூடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் பேரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த வெங்கடேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

மாவட்ட முதன்மை நீதிபதி சஞ்சய் பாபா, குற்றவாளி வெங்கடேசுக்கு போக்சோ சட்ட பிரிவின் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனை, மற்றொரு பிரிவின் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். அரசு தரப்பில் போக்சோ சிறப்பு வழக்கறிஞர் செந்தில்குமார் ஆஜரானார். தொடர்ந்து வெங்கடேசை போலீசார் கோவை மத்திய சிறைக்கு சென்றனர்.

Updated On: 30 March 2022 11:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  3. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  4. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...
  5. காஞ்சிபுரம்
    ஸ்ரீ ராமானுஜர் திருக்கோயிலில் 1007வது அவதார பிரம்மோற்சவ விழா
  6. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!