உதகையில் நடந்த TNPC தேர்வு மையத்தை தேர்வாணைய குழு தலைவர்பார்வையிட்டார்

உதகையில் நடந்த TNPC தேர்வு மையத்தை தேர்வாணைய குழு தலைவர்பார்வையிட்டார்
X
கடந்த 8 ம் தேதி நடைபெறவிருந்த இந்த தேர்வு இன்று நடப்பதாகவும், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்வு நடப்பதாகவும் கலெக்டர் பேட்டி.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய மூலம் இன்று நடைபெற்று வரும் ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெறும் மையங்களை தேர்வாணைய குழு உறுப்பினர் ஏ.வி. பாலுசாமி உதகையில் பல்வேறு அரசு தேர்வு நடைபெறும் மையங்களை மாவட்ட ஆட்சியர் திரு அம்ரித் மற்றும் அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கடந்த 8 ந் தேதி நடைபெறுவதாக இருந்த இந்த தேர்வு இன்று நடைபெறுவதாகவும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்வு நடைபெற்று வருவதாக அப்போது கூறினார்.

Tags

Next Story
ai in future agriculture