/* */

உதகையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்

வணிகர்கள் தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

HIGHLIGHTS

உதகையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்
X

ஆய்வில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள்.

நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுக்க உதகை நகராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்று கடைகளில் திடீரென சோதனை நடந்தது. மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் லிவிங்ஸ்டன், நகராட்சி ஆணையாளர் காந்திராஜ், நகர்நல அலுவலர் பொறுப்பு, ஸ்ரீதர், துப்புரவு ஆய்வாளர் மகாராஜன் மற்றும் பணியாளர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

3 குழுக்களாக பிரிந்து உதகை நகராட்சி மார்க்கெட், மெயின் பஜார், சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை உள்ளிட்ட இடங்களில் உள்ள 500-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை நடந்தது. இதில் தடை செய்யப்பட்ட 16 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதைப் பயன்படுத்தியவர்களுக்கு ரூ.13 ஆயிரத்து 900 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.

இதுபோன்ற சோதனை தொடர்ந்து நடத்தப்படும். விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அபராதம் விதிப்பது மட்டுமின்றி பிற சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே, வணிகர்கள் தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

Updated On: 16 Dec 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது