ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் கனமழை

ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் கனமழை
X

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக பனி மற்றும் வெயிலின் தாக்கம் காணப்பட்டு வந்த நிலையில் இன்று 1 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக உறைபனியும், நீர் பனி காலநிலையும் வெயிலின் தாக்கமும் காணப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று பிற்பகல் 1 மணி நேரத்திற்கும் மேலாக ஊட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள தொட்டபெட்டா , தாவரவியல் பூங்கா, சேரிங் கிராஸ், மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது .சமவெளி பகுதிகளிலிருந்து ஊட்டிக்கு சுற்றுலா வந்திருந்தவர்கள் மழையை கண்டு குதூகலமாகினர். இந்த மழையால் உள்ளூர் மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags

Next Story
ai in future agriculture