/* */

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு: நீலகிரி மாவட்ட நிர்வாகம் உஷார்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள, நீலகிரி மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளதாக, கலெக்டர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு: நீலகிரி மாவட்ட நிர்வாகம் உஷார்
X

மாவட்ட ஆட்சி தலைவர் இன்னசென்ட் திவ்யா.

கேரளா மாநிலத்தையொட்டிய நீலகிரி மாவட்டத்தின் பந்தலூர் பகுதியில் நேற்று 8 செ மீ மழை, இன்று காலை 7 செ.மீ மழை பெய்துள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் 24 மணி நேரம் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சி தலைவர் இன்னசென்ட் திவ்யா கூறினார்.

உதகையில் இன்று செய்தியாளர்களிடையே பேசிய அவர், மாவட்டத்தில் பெய்து வரும் மழை தொடர்பாக, முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்தியதாகவும், மழையினால் சுற்றுலாப்பயணிகள், பொதுமக்களுக்கு எந்த வகையிலும் போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையில், ஆங்காங்கே மீட்பு குழுக்களை தயாராக வைக்குமாறு கூறியதாகவும் கலெக்டர் கூறினார்.

கூடலூர், பந்தலூர் பகுதியில் மழையின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், 287 கி.மீ தூரத்திற்கு நீர் நிலைகள் தூரெடுக்கப்பட்டதன் விளைவாக, வெள்ளநீரினால் இதுவரை பாதிப்பு ஏற்படவில்லை என்ற கலெக்டர், தற்போது 456 வெள்ள பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், தாழ்வான நிலச்சரிவு ஏற்படும் அபாயமுள்ள பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் சூழல் ஏற்படவில்லை. மழை நீடித்தால் நாளை வெளியேற்றப்பட்டு நிவாரண மையங்களில் தங்க வைக்கப்படுவார்கள் என்றார்.

Updated On: 17 Oct 2021 12:53 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!
  2. உசிலம்பட்டி
    மதுரை அருகே திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த வாகனம்
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலில் மினுமினுக்கும் சரும் வேண்டுமா? கவலையை விடுங்கள்!
  4. வீடியோ
    மீண்டும் வெடித்தது Suriya-வின் சர்ச்சை மும்பையில் என்ன நடக்கிறது ? |...
  5. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
  7. ஈரோடு
    சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கல்லூரியில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  8. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  9. ஈரோடு
    சத்தி, புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள்:...
  10. இந்தியா
    ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் 82 சதவீதம் வாக்குப்பதிவு