/* */

உதகையில் அடுக்குமாடி குடியிருப்புகளை பயன்பாட்டிற்கு தர கோரிக்கை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கட்டி கொடுக்கப்பட்ட வீடுகளை, பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும் என்று, ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

உதகையில் அடுக்குமாடி குடியிருப்புகளை பயன்பாட்டிற்கு தர கோரிக்கை
X

உதகையில், கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை பயன்பாட்டுக்கு வழங்கக்கோரி, ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டது. இந்த சம்பவத்தில் கேத்தி, எல்லநள்ளி, நுந்தளா, அச்சணக்கல் உள்ளிட்ட பல பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டது. சுமார் 40-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வீடுகளை இழந்து தவித்து வந்தனர்.

இவர்களுக்காக 2010-ம் ஆண்டு கேத்தி பகுதியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தற்காலிகமாக வீடுகள் கட்டப்பட்டன. ஆனால் ஒரே ஒரு அறை மட்டுமே அதில் இருப்பதால் மாற்று இடம் கோரி அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

பின்னர், அரசு குடிசை மாற்று வாரியம் சார்பில், கேத்தி அருகே உள்ள பிராசபுரம் பகுதியில் இடம் தேர்வு செய்து 180 வீடுகள் கட்டி கடந்த ஆண்டு திறக்கப்பட்டன. அப்பகுதி மக்களுக்கு இந்த வீடுகள் வழங்கப்பட்டது முதல் மின்சாரம், தண்ணீர் வரி ஆகியவை செலுத்தியும், தற்போது வரை வீட்டு சாவிகள் அந்தந்த உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை.

இந்த நிலையில், தற்போது பெய்து வரும் மழையில் தற்காலிக வீடுகள் பழுதடைந்துள்ளதால் புதிய வீடுகளை திறந்து பயன்பாட்டுக்கு விட வேண்டும் என்று, அப்பகுதி மக்கள், நீலகிரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு வழங்கினர்.

Updated On: 17 Jun 2021 2:36 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு