/* */

நீலகிரி மாவட்டத்தில் நாளை வாக்குச்சாவடிகள் குறித்து கருத்து கேட்பு கூட்டம்

நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாளை வாக்குச்சாவடிகள் குறித்து கருத்து கேட்பு கூட்டம்

HIGHLIGHTS

நீலகிரி மாவட்டத்தில் நாளை வாக்குச்சாவடிகள் குறித்து கருத்து கேட்பு கூட்டம்
X

நீலகிரி மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகளில் தேர்தல் நடக்க இருக்கிறது.

தேர்தலுக்காக நீலகிரியில் அமைக்கப்பட்டு உள்ள வாக்குச்சாவடிகளை இறுதி செய்வது குறித்து தங்களது கருத்துக்களை தெரிவிக்கும் பொருட்டு ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி தலைமையில் நாளை (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு உதகை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறுகிறது.

கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு நீலகிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டு உள்ள வாக்குச்சாவடிகள் குறித்து தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என நீலகிரி கலெக்டர் (பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார்.

Updated On: 7 Nov 2021 11:20 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.