/* */

உதகை நகராட்சியில் வரும் திங்கட்கிழமை மக்கள் குறை தீர் கூட்டம்

வருகிற 11-ம் தேதி முதல் திங்கட்கிழமை தோறும் காலை 11 மணியளவில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது.

HIGHLIGHTS

உதகை நகராட்சியில் வரும் திங்கட்கிழமை மக்கள் குறை தீர் கூட்டம்
X

உதகை நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி.

உதகை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளது. சுற்றுலா நகரம் என்பதால் கழிப்பிடம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இருப்பினும் சில இடங்களில் பொதுமக்கள் அடிப்படை வசதிகள் குறித்து குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்து வருகின்றனர்.

இதை கருத்தில் கொண்டு உதகை நகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து உதகை நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:

உதகை நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் முன்னிலையில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், நகராட்சி சம்பந்தமாக பொதுமக்களின் அடிப்படை வசதிகள் தொடர்புடைய குறைகளை கண்டறிய வருகிற 11-ம் தேதி முதல் வாரம்தோறும் திங்கட்கிழமை தோறும் காலை 11 மணியளவில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Updated On: 9 Oct 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  2. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  3. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!
  4. கோவை மாநகர்
    அப்பாவி மக்களின் நிலத்தை பறிக்கும் யானை வழித்தடங்கள்: வானதி சீனிவானசன்...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மு குட்டி செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் சொல்லும் இளம்காலை நேரக்காற்று!
  7. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  9. கோவை மாநகர்
    பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. சோதனை
  10. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை