/* */

நலத்திட்ட உதவிகள் பெற விடுபட்டவர்களை கணக்கெடுக்க கோரி கலெக்டரிடம் மனு

தமிழக அரசு அறிவிக்கும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் எவ்வித பாகுபாடுமின்றி அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க மனு.

HIGHLIGHTS

நலத்திட்ட உதவிகள் பெற விடுபட்டவர்களை கணக்கெடுக்க கோரி கலெக்டரிடம் மனு
X

மனு அளிக்க வந்த பொதுமக்கள்.

குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் கிராம பொதுமக்கள் நலத்திட்ட உதவிகள் பெற விடுபட்டவர்களை கணக்கெடுக்க கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் வண்டிசோலை ஊராட்சிக்கு உட்பட்ட நஞ்சப்பசத்திரத்தில் கடந்த வாரம் அரசு துறைகள் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்குவது மற்றும் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வது குறித்து வீடு, வீடாக கணக்கெடுக்கும் பணி நடந்தது.

அதே பகுதியில் வசிக்கும் சில குடும்பங்கள் கணக்கெடுப்பில் விடுபட்டு உள்ளது. விடுபட்ட அந்த குடும்பங்களின் நலனையும் கருத்தில் கொண்டு விவரங்களை கணக்கெடுக்க வேண்டும். தமிழக அரசு அறிவிக்கும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் எவ்வித பாகுபாடுமின்றி அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

Updated On: 20 Dec 2021 5:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்