/* */

திருமுருக பக்தர்கள் பேரவை: கோவில்களை திறக்க தமிழக முதல்வருக்கு மனு

வெள்ளிக்கிழமை முதல் கோவில்களை திறந்து அரசு விதிமுறைகளின்படி வழிபாடு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

திருமுருக பக்தர்கள் பேரவை: கோவில்களை திறக்க தமிழக முதல்வருக்கு மனு
X

பைல் படம்.

நீலகிரி மாவட்ட திருமுருக பக்தர்கள் பேரவை சார்பில், தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழில் வழிபாடு நடத்த வேண்டும். தகுதி வாய்ந்த அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று ஆணை பிறப்பித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. வருகிற மாதங்கள் விழா காலங்களாக உள்ளது. வருகிற அக்டோபர் 7-ம் தேதி நவராத்திரி விழா ஆரம்பமாகிறது. இதையொட்டி பெண்கள் கோவில்களில் கொலு வைத்து வழிபாடு செய்வதும், திருவிளக்கு வழிபாடு செய்வதும் வழக்கம். எனவே, வார நாட்களை போல் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் கோவில்களை திறந்து அரசு விதிமுறைகளின்படி வழிபாடு நடத்த அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Updated On: 29 Sep 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  2. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  5. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  6. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  7. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  8. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  9. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகராட்சி சார்பில் வீடற்றவர்களுக்காக மேலும் 3 தங்கும்...