மின்னொளியில் ஜொலிக்கும் கோயில்

மின்னொளியில் ஜொலிக்கும் கோயில்
X
சித்திரைத் திருவிழாவிற்காக உதகை மாரியம்மன் காளியம்மன் திருக்கோவில் மின்னொளியில் ஜொலிக்கிறது

நீலகிரி மாவட்டத்தில் உதகையில் உள்ள மாரியம்மன் காளியம்மன் திருக்கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். ஆண்டுதோறும் சித்திரை திருவிழா ஒரு மாதத்திற்கு நடைபெறும். ஒவ்வொரு சமூகத்தினரும் மாதம் முழுவதும் அவரவர்கள் உபய நாளில் அம்மனை அலங்கரித்து திருவீதி உலா நடத்தி வருவர்.

கடந்த ஆண்டு கொரோனா காரணமாக திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் அரசு அறிவித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகள் நெறிமுறைகளின் படி சித்திரை தேர் திருவிழா நடைபெற உள்ளது.

இந்தாண்டு திருவிழா நடைபெறுவதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஒரு மாதம் நடைபெறும் இந்த திருவிழாவிற்காக மாரியம்மன் காளியம்மன் திருக்கோவில் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது.

Tags

Next Story
ai in future agriculture