/* */

உதகை அருகே மலைப்பாதையில் கார் கவிழ்ந்து விபத்து: 2 பேர் பலி

உதகை அருகே கல்லட்டி மலைபாதையில் கார் கவிழ்ந்த விபத்தில் கணவன் - மனைவி உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்துள்ள மாயார் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வரும் மருமகனையும், தங்களது மகளையும் பார்ப்பதற்காக, உதகை வழியாக கல்லட்டி மலைப்பாதையில், சாத்தூரை சார்ந்த பசீர் அகமது, அவரது மனைவி பீமா ஜான் ஆகியோர், இன்று காரில் வந்து கொண்டிருந்தனர்.

கல்லட்டி மலைப்பாதை வழியாக சென்றுக்கொண்டிருந்த போது, கார் கட்டுபாட்டை இழந்து 21-வது கொண்டை ஊசி வளைவிலிருந்து 22-வது கொண்டை ஊசி வளைவில், தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கணவன் மனைவி இருவரும் காரின் அடியில் சிக்கி உயிரிழந்தனர்.

இருவரது உடல்களை மீட்க முடியாததால் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 9 Jun 2021 4:22 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...