/* */

2 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்தவனுக்கு 18 ஆண்டு சிறை

2 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றவாளிக்கு 1லட்சம் அபராதம் 18 ஆண்டு சிறை தண்டனை விதித்தது உதகை மகிளாநீதிமன்றம்

HIGHLIGHTS

2 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்தவனுக்கு 18 ஆண்டு சிறை
X

குழந்தைக்கு பாலியல் தொல்லை தந்த குற்றவாளி கோபாலகிருஷ்ணன்.  

கடந்த 2018 ஆம் ஆண்டு உதகை அருகே சோகத்தொரை எதுமகண்டிப் பகுதியில் கோபாலகிருஷ்ணன் என்பவன் அதே பகுதியில் உள்ள 2 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளான். இதையடுத்து அச்சிறுமியின் பாட்டி உதகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை உதகை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அருணாச்சலம், சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த கோபாலகிருஷ்ணனுக்கு 18 ஆண்டு சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத் தொகை செலுத்தாத பட்சத்தில் மேலும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக மாலினி பிரபாகரன் வாதாடினார்.

Updated On: 10 April 2021 11:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உறவுகளுக்கு, நட்புக்கு அன்பின் வெளிப்பாடாக முன்கூட்டியே சொல்வோம்...
  2. லைஃப்ஸ்டைல்
    தீபாவளிக்கு போனஸாக, அட்வான்ஸ் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் இல்லத்தில் அன்பு செழிக்கட்டும்! ஆனந்தம் நிலைக்கட்டும்!! -...
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதை வரிகளில் பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    ஆதரவு திரட்டும் OPS | கொங்கில் வலுவிழக்கும் Edappadi | O Panneerselvam...
  7. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  8. ஈரோடு
    ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத் தேரோட்டம்
  9. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  10. லைஃப்ஸ்டைல்
    தமிழில் திருமண நாள் நல்வாழ்த்துக்கள்