/* */

கனமழை: உதகையில் மண்சரிவால் போக்குவரத்து பாதிப்பு

உதகை நகரில் காற்றுடன் பெய்த கனமழையால், 30 அடி உயர மண் திட்டு சரிந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கடந்த 4 நாட்களாக நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் கூடலூர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது இதனால் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உதகை நகரில் இரவு பகல் என தொடர்ந்து மழை பெய்து வருவதால் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

உதகை நகரில் தனியார் மருத்துவ மனை கல்லூரிக்கு செல்லும் பிரதான சாலை மற்றும் 5 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலையில் 30 அடி உயரம் கொண்ட மண் திட்டு சரிந்து மண்சரிவு ஏற்பட்டது. இதனால் நாள்தோறும் அச் சாலையைப் பயன்படுத்தும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் இருசக்கர வாகனத்தை தவிர்த்து மற்ற வாகனங்கள் மாற்று பாதையில் சென்று வருகின்றன எனவே சாலையில் விழுந்து மண் சரிவை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 19 July 2021 4:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?