/* */

அதிகாரிகள் வரவில்லை : குறை தீர் கூட்டத்தில் இருந்து வெளியேறிய விவசாயிகள்

வெகு நேரம் காத்திருந்தும் கலெக்டர் வராததால் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தோம் என விவசாயிகள் தெரிவித்தனர்.

HIGHLIGHTS

அதிகாரிகள் வரவில்லை : குறை தீர் கூட்டத்தில் இருந்து வெளியேறிய விவசாயிகள்
X

கூட்டத்தில் இருந்து வெளியேறிய விவசாயிகள்.

உதகை கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்க இருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக தொலைதூர இடங்களில் இருந்து விவசாயிகள் வந்தனர். இந்நிலையில் மதியம் 12 மணி வரை கூட்டம் தொடங்கவில்லை. கூட்டத்துக்கு கலெக்டர் வரவில்லை.

இதனால் வெகு நேரம் காத்திருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து விட்டு வெளிநடப்பு செய்தனர். அவர்களிடம் அதிகாரிகள் கலெக்டர் சிறிது நேரத்தில் வந்து விடுவார். அரங்கில் அமருங்கள் என்று கூறினர். இருப்பினும் அவர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்துகொள்வதால் எங்களது கோரிக்கைகளை முன்வைத்து தீர்வு காண வாய்ப்பு உள்ளது. நாங்கள் வெகு நேரம் காத்திருந்தும் கலெக்டர் வராததால் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தோம் என்றனர்.

Updated On: 20 Nov 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  2. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  3. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  6. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
  7. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  8. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  9. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  10. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!