/* */

மகளிர் உரிமை தொகை வழங்குவது குறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

மகளிர் உரிமை தொகை வழங்குவது குறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

HIGHLIGHTS

மகளிர் உரிமை தொகை வழங்குவது குறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
X

மகளிர் உரிமை தொகை வழங்குவது தொடர்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மகளிர் உரிமை தொகை வழங்குவது தொடர்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தினை செயல்படுத்துவது குறித்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அம்ரித் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது:-

நீலகிரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் விண்ணப்பங்களை பெற மூன்று கட்டங்களாக முகாம் நடத்தப்படவேண்டும். முகாம் நடத்துவதற்கான பள்ளிக்கட்டடம், சமுதாயக்கூடம் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் தேர்வு செய்து உடன் சமர்பிக்க வேண்டும். முதற்கட்டத்தில் சுமார் 1,10,000 குடும்ப அட்டைகளுக்கு 200 முகாம்களிலும், இரண்டாம் கட்டத்தில் சுமார் 1,10,000 குடும்ப அட்டைகளுக்கு 200 முகாம்களிலும் விண்ணப்பங்கள் பெறும் வகையில் திட்டமிடப்பட வேண்டும். திட்ட இயக்குநர் இத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்த நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் ஆட்டோ மூலம் விளம்பரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அச்சடித்து வரப்பெறும் விண்ணப்பப் படிவங்கள் மற்றும் டோக்கன்களை கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அனைத்து நியாய விலைக்கடை விற்பனையாளர்களிடம் அளித்து அதனை அவர்கள் வீடுகள் தோறும் சென்று வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு வழங்கப்படும் விண்ணப்பங்களில் சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரரின் குடும்ப அட்டை எண் குறிப்பிட்டு வழங்கி, முகாம் நடைபெறும் இடம், நாள், நேரம் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.

மேலும், 404 ரேஷன் கடைகள் மற்றும் 34 நடமாடும் ரேஷன் கடைகள் ஆகியவற்றின் விற்பனையாளர் விவரங்களை கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அளிக்க வேண்டும். முகாம் நடைபெறும் இடங்களில் வரும் பயனாளர்கள் அமர்வதற்கான போதிய இருக்கைகள், குடிநீர், கழிப்பறை வசதி ஆகியவை ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். முகாமின் போது பூர்த்தி செய்யப்படாத விண்ணப் பங்கள் பெறப்பட்டால் அதனை பூர்த்தி செய்து வழங்க உதவியாளர்களை நியமனம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரிய தர்ஷினி, கலெக்டரின் நேரடி உதவியாளர் தனப்ரியா, திட்ட இயக்குநர்கள் உமாமகேஸ்வரி (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை), பாலகணேஷ் (மகளிர் திட்டம்), கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாம்சாந்தகுமார், கூடலூர்வருவாய் கோட்டாட்சியர் முகம்மது குதுர துல்லா, நகராட்சி ஆணையாளர்கள் ஏகராஜ் (ஊட்டி), கூடலூர், நெல்லியாளம் (பொ) பிரான்சிஸ் சேவியர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சசிக்குமார் சக்கர பாணி, வட்டாட்சியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 11 July 2023 4:37 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?