/* */

நீலகிரி: வாக்குப்பதிவு எந்திரங்கள் அடுக்கி வைப்பு

வாக்கு எண்ணும் மையத்தில் கழிப்பறைகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

நீலகிரி: வாக்குப்பதிவு எந்திரங்கள் அடுக்கி வைப்பு
X

பைல் படம்.

நீலகிரி மாவட்டத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் 13 உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 15 வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பாதுகாப்பு அறைகளில் வார்டு வாரியாக அடுக்கி வைக்கப்பட்டது.

தொடர்ந்து பாதுகாப்பு அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். நாளை காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. உதைகை நகராட்சி வாக்கு எண்ணும் மையமான ரெக்ஸ் மேல்நிலைப் பள்ளியில் வாக்குகளை எண்ண 9 மேஜைகள் போடப்பட்டு உள்ளது.

தபால் வாக்குகள் எண்ணுவதற்கு ஒரு மேஜை போடப்பட்டது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணிகளை மேற்பார்வையிட்டு தேர்தல் முடிவுகளை அறிவிக்க உள்ளனர். தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பெற்ற ஒப்புதல் கடிதத்தை காண்பித்த பின்னர் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். வாக்கு எண்ணும் மையத்தில் கழிப்பறைகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

Updated On: 21 Feb 2022 6:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  3. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  4. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  5. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  6. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...
  7. வீடியோ
    பொண்ண பணத்துக்காக ஏமாத்தி சீரழிச்சான் | Perarasu கிளப்பிய சர்ச்சை...
  8. க்ரைம்
    ஜெயக்குமார் கொலையா? தற்கொலையா? தென்மண்டல போலீஸ் ஐஜி பரபரப்பு பேட்டி
  9. ஈரோடு
    பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடி இரண்டாம் ஆண்டு...
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் நாடகத்தின் அரங்கேற்ற நாள், திருமணம்..! வாங்க வாழ்த்தலாம்..!