/* */

உதகையில் கொட்டும் மழையிலும் தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் ஆர்வம்

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பொதுமக்கள், முகாமுக்கு வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

HIGHLIGHTS

நீலகிரி மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறையினர் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுவதை மாவட்ட நிர்வாகம் துரிதப்படுத்தி வருகிறது.

அவ்வகையில், உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், குந்தா, பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில், தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக உதகையில் லவ்டேல் பகுதியில் இன்று பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் கூறி இருந்தது.

தடுப்பூசி முகாம் ஒருபுறம் நடக்க, மறுபுறம் மழை தொடர்ச்சியாக பெய்து கொண்டிருந்தது. எனினும், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் குவிந்தனர். குடை பிடித்துக் கொண்டு, நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் காத்திருந்து, கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி கொண்டனர்.

Updated On: 19 July 2021 8:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?