/* */

நீலகிரி மாவட்ட புதிய கலெக்டராக அம்ரித் பொறுப்பேற்பு

மக்கள், மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு குறைகளை தெரிவிக்கலாம்; அதற்கு உடனடியாக தீர்வு காணப்படும் என்கிறார் புதிய கலெக்டர்.

HIGHLIGHTS

நீலகிரி மாவட்ட புதிய கலெக்டராக அம்ரித் பொறுப்பேற்று கொண்டார். கலெக்டர் அலுவலகத்தில், கோப்புகளில் கையெழுத்து இட்டு பொறுப்பேற்றுக் கொண்ட அவருக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி உள்பட மாவட்ட நிலை அலுவலர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

புதிய கலெக்டர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக முதல்வர், தலைமைச் செயலாளர் வழிகாட்டுதல்படி நீலகிரி மாவட்டத்தில் மக்களின் நலனுக்காக பணிபுரிவேன். நீலகிரி சூழலியல் அடிப்படிடையில் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாக உள்ளது. சுற்றுலா பயணிகள் வரவும், மக்கள் வாழவும் தகுதியானதாக மாவட்டம் இருக்க உறுதி செய்யப்படும்.

மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு, மக்கள் குறைகளை தெரிவிக்கலாம். உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும். அரசின் திட்டங்கள் மக்களிடம் கொண்டு செல்லப்படும். மசினகுடியில் யானை வழித்தட பிரச்சினைக்கு உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 29 Nov 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  2. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  3. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  5. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  6. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  7. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  10. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...