/* */

முழு ஊரடங்கிலும் இயக்கப்பட்ட ஊட்டி மலை ரயில்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

நீலகிரியில் முழு ஊரடங்கிலும் மலை ரயில் இயக்கப்பட்ட து. குடும்பத்துடன் சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்தனர்.

HIGHLIGHTS

முழு ஊரடங்கிலும் இயக்கப்பட்ட ஊட்டி மலை ரயில்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
X

கொரானா பரவலை கட்டுப்படுத்த, தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட மூன்றாவது வார ஊரடங்கான இன்று உதகை, குன்னூர் , கோத்தகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

நூற்றுக்கணக்கான காவலர்கள் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வாகன சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்க்கும் நீலகிரி மலை ரயில் மேட்டுப்பாளையம் ,குன்னூர் உதகை இடையே முன்பதிவு செய்த பயணிகளுடன் இன்றும் இயக்கப்பட்டது.

மலை ரயிலில் வந்திரங்கிய சுற்றுலா பயணிகள் மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை வரும் மலை ரயிலில் பயணித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர். ரயில் பாதையில் உள்ள குகைகள் மற்றும் இயற்கை காட்சிகளை கண்டு ரசிப்பது புது அனுபவமாக இருந்தது எனவும் தெரிவித்தனர்.

ஆட்டோக்கள், சுற்றுலா வாகனங்கள் இயங்க அனுமதியளிக்கப்பட்டதால் பல்வேறு இடங்களிலிருந்து வந்த சுற்றுலாப்பயணிகள் சிரமமின்றி தாங்கள் முன்பதிவு செய்துள்ள சுற்றுலா விடுதிகளுக்கு பாதுகாப்பாக சென்றனர்.

Updated On: 23 Jan 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்து மானியத்திட்டங்கள் பெற அழைப்பு
  2. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  3. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  4. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  6. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  7. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  8. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  9. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  10. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?