நீலகிரியில் வசிக்கும் தோடரின மக்களின் "மொர்ட் வெத்" திருவிழா

நீலகிரியில் வசிக்கும் தோடர் பழங்குடியினர் மக்கள் புத்தாண்டினை வரவேற்கும் விதமாக கொரோனா, ஒமிக்ரான் வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து உலக மக்கள் நலன் பெறவும், விவசாயம் செழிக்கவும் ஆண்டுதோறும் கொண்டாடும் மொர்டுவெர்த் திருவிழா உதகை முத்தநாடு மந்து எனும் பகுதியில் நடைப்பெற்றது.
மலைப் பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப் பகுதிகளில் தங்களுக்கென பாரம்பரிய உடை, தனி கலாச்சாரத்துடன் குடில் அமைத்து நூற்றாண்டைக் கடந்து வாழ்ந்து வருபவர்கள் தோடர் பழங்குடியினர் மக்கள்.
உலகத்தில் நீலகிரி மலைத் தொடரில் மட்டும் இயற்கை வளங்களைக் கொண்டு குடில் அமைத்து மந்து எனப்படும் சிறு,சிறு குக்கிராமங்களில் அடர்ந்த வனப்பகுதியில் வசித்து வரும் இவர்களின் குலத்தொழில் முழுக்க முழுக்க விவசாயம் ஆகும். இவர்கள் எருமை மாடுகளை குலதெய்வமாக வணங்குவதும் இவர்கள் வசிக்கும் பகுதியில் நாவல் மரங்களை வளர்த்து இயற்கையாக வாழ்ந்து வரும் மக்கள் ஆகும்.
இவர்கள் ஆண்டு இறுதி அல்லது புத்தாண்டு முதல் வாரத்தில் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை தங்களது குல தெய்வம் கோவிலில் விவசாயம் செழிக்கவும், தாங்கள் வளர்க்கும் எருமைகள் விருத்தியடையவும் வன விலங்குகளிடமிருந்து காத்திடவும் மொர்டுவெர்த் பண்டிகை உதகை அருகே உள்ள முத்து நாடு மந்தில் உள்ள இவர்களின் குல தெய்வ கோவிலில் கொண்டாடப்படுவது வழக்கம். பிறந்த ஆண் குழந்தை முதல் வயது முதிர்ந்த ஆண்கள் மட்டுமே கொண்டாடும் இந்த திருவிழாவில் தங்களது பாரம்பரிய உடையணிந்து பங்கேற்பது வழக்கம்.
அவ்வாறு பங்கேற்கும் ஆண்கள் தோடர் பழங்குடியினர் மக்கள் தங்களது பாரம்பரிய பாடலுடன் நடனமாடி சிறப்பு வழிபாடு நடத்துவதுடன் தோடர் பழங்குடியினர் இளைஞர்கள் தங்களது பலத்தை காண்பிக்க இளவட்ட கல்லை தூக்கி தங்களது பலத்தை நிரூபித்து கொண்டாடுவது தற்போது வரை நடந்து வருகிறது ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்த பாரம்பரிய திருவிழாவை காண ஏராளமான மக்கள் அப்பகுதிக்கு வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தோடர் பழங்குடியின மக்கள் தெரிவிக்கையில், ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும் இந்த திருவிழாவில் உலக மக்கள் நலன் பெற வேண்டியும், விவசாய நிலங்கள் செழிக்கவும், காடுகளை பாதுகாக்கவும், தாங்கள் வளர்க்கும் எருமைகள் விருத்தி அடையவும் இந்த இந்த திருவிழா நடைபெறும். தற்போது உலகத்தையே ஆட்டிப் படைக்கும் கொரோனா, ஒமிக்ரான் வைரஸ் நோய் தொற்றிலிருந்து விடுப்பட்டு உலக மக்கள் நலன் பெற பிரார்த்தனைகள் நடைபெற்றதாக தோடரின மக்கள் கூறினர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu