/* */

உதகை அரசு பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஊட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு மாணவர்களுடன் இருக்கையில் அமர்ந்து, அவர்களுக்கு கற்றல் கற்பித்தல் முறையை ஆய்வு மேற்கொண்டார்.

கொரோனா பாதிப்புக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்ட சூழ்நிலையில், மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் பாடம் நடத்தப்படுகிறதா, அடிப்படை வசதிகள் உள்ளதா என்று ஆய்வு செய்தார். மாணவர்களுடன் கலந்துரையாடியதோடு, அவர்கள் படிப்பதற்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும் என்று, ஆசிரியர்களிடம் அறிவுறுத்தினார்.

மேலும் சில பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், கொரோனா பரவலைத் தடுக்க அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். ஆய்வின் போது, நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசரூதின் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

Updated On: 27 Sep 2021 11:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  2. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  3. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  4. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  5. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  6. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  7. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  8. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்
  9. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  10. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...