/* */

நீலகிரியில் நாளை மெகா தடுப்பூசி முகாம்

நீலகிரி மாவட்டத்தில 295 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு 7080 சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

HIGHLIGHTS

நீலகிரியில் நாளை மெகா தடுப்பூசி முகாம்
X

உதகையில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் கொரோனா தடுப்பு ஊசி தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸ் அச்சுறுத்தலை தொடர்ந்து எல்லை மாவட்டமாகத் திகழும் கோவை மற்றும் நீலகிரி மாவட்ட எல்லைப்பகுதியில் நாளை நடமாடும் கோவிட் 19 சிறப்பு தடுப்பு ஊசி முகாம்கள் நடத்தப்படும் என தமிழக அரசின் காதி மற்றும் கதர் கிராமிய தொழில்கள் வாரியத்தின் தலைமை செயல் அலுவலரும், கோவிட் தடுப்பு ஊசிக்கான கண்காணிப்பு அலுவலருமான சங்கர் கூறினார்.

உதகையில் இன்று செய்தியாளர்களிடையே பேசிய அவர், தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தலின் படி இந்த இரு மாவட்டங்களில் தடுப்பு ஊசி செலுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்படும் என்றும், நாளைய முகாமில் கோவை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர்களுக்கும், நீலகிரி மாவட்டத்தில் 30 ஆயிரம் பேர்களுக்கும் தடுப்பு ஊசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார்.

இப்பணியை துரிதமாக மேற்கொள்ள கோவை மாவட்டத்தில் 1475 மையங்களும், நீலகிரி மாவட்டத்தில 295 மையங்களும் ஏற்படுத்தப்பட்டு 7080 சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக கூறினார். முன்னதாக உதகை அரசு தமிழக மாளிகையில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஊசி தொடர்பான ஆய்வு கூட்டத்திலும் சங்கர் கலந்துக் கொண்டு ஆலோசனை நடத்தினார்.

Updated On: 11 Sep 2021 3:36 PM GMT

Related News

Latest News

  1. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  2. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  4. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  5. காஞ்சிபுரம்
    திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    தனிமையின் வலி – ஆழம் நிறைந்த தமிழ் மேற்கோள்கள்!
  7. ஈரோடு
    ஈரோட்டில் பெண்களுக்கான இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி மே.20ல் துவக்கம்
  8. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  9. காஞ்சிபுரம்
    ஸ்ரீபெரும்புதூர் அருகே மர்மமான முறையில் எரிந்த இரண்டு ஜேசிபி...
  10. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...