/* */

உதகையில் தேர்தல் நடத்தை விதிகள் குறித்து ஆய்வு கூட்டம்

விதிமுறைகளை பின்பற்றி நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

உதகையில் தேர்தல் நடத்தை விதிகள் குறித்து ஆய்வு கூட்டம்
X

மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொறுப்பு வகிக்கும் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி தலைமையில் நடைபெற்றது.

இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்துக் கொண்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிக்குட்பட்ட 108 வார்டு உறுப்பினர்கள், 11 பேரூராட்சிக்குட்பட்ட 186 வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் தொடர்பான நடத்தை விதிமுறைகளை ஆட்சியர் விரிவாக எடுத்துரைத்தார்.

தேர்தல் தொடர்பான கூட்டங்கள் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்றி நடத்த வேண்டும் என்றும், இதை மீறும் பட்சத்தில் தேர்தல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள தால் தேர்தலை ரத்து செய்வது குறித்து ஆராயப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் கூறினார்.

கொரோனா தொற்று அச்சுறுத்தலை உணர்ந்து தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Updated On: 28 Jan 2022 4:55 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  3. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  4. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...
  5. காஞ்சிபுரம்
    ஸ்ரீ ராமானுஜர் திருக்கோயிலில் 1007வது அவதார பிரம்மோற்சவ விழா
  6. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!