/* */

கிருஸ்தவர்களின் தவக்காலம் இன்று தொடக்கம்: தேவாயலத்தில் சிறப்பு வழிபாடு

நீலகிரி பல்வேறு ஆலயங்களில் சாம்பல் புதன் கடைபிடிக்கப்பட்டு சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன.

HIGHLIGHTS

கிருஸ்தவர்களின் தவக்காலம் இன்று தொடக்கம்: தேவாயலத்தில் சிறப்பு வழிபாடு
X

உதகை சேரிங்கிராசில் உள்ள தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு ஆராதனை நடந்தது.

கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசம் இருந்ததை நினைவுக்கூறி தவக்காலமாக கடைபிடித்து வருகின்றனர்.

நடப்பாண்டில் இன்று முதல் கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கி உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. உதகை சேரிங்கிராசில் உள்ள தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு ஆராதனை நடந்தது.

நீலகிரி மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமை தாங்கி தவக்கால திருப்பலியை நிறைவேற்றினார். கடந்த ஆண்டு காய்ந்த குருத்தோலைகளை எரித்து சாம்பலாக்கி, அதனை மந்திரித்து கிறிஸ்தவர்கள் நெற்றியில் சிலுவை அடையாளம் இட்டு பூசப்பட்டது. ரஷ்யா-உக்ரைன் போரில் அமைதி நிலவ சிறப்பு பிரார்த்தனை நடந்தது. பங்கு தந்தை ஜான் ஜோசப் ஸ்தனிஸ், பங்கு மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தவக்காலத்தை முன்னிட்டு தினமும் சிலுவை பாதை தியானித்தல், திருத்தல பயணங்கள் சென்று வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அதேபோல் பல்வேறு ஆலயங்களில் சாம்பல் புதன் கடைபிடிக்கப்பட்டு சிறப்பு பிரார்த்தனை நடந்தன.

Updated On: 2 March 2022 9:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  2. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  3. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  4. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  5. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  6. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  8. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  9. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  10. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...