/* */

சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் விழிப்புணர்வு வாகனச்சேவை துவக்கம்

நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், பிரச்சார வாகனச்சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் விழிப்புணர்வு வாகனச்சேவை துவக்கம்
X

நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில்,  விழிப்புணர்வு வாகன சேவையை, மாவட்ட முதன்மை நீதிபதி சஞ்சய் பாபா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பிரச்சார வாகனம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி, உதகை கோர்ட்டு வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட முதன்மை நீதிபதி சஞ்சய் பாபா தலைமை தாங்கி, கொடியசைத்து வாகனத்தை தொடங்கி வைத்தார். இந்த வாகனம் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு நேரடியாக சென்று, விழிப்புணர்வு குறும்படங்கள் மூலம், அடிப்படை சட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது.

மேலும் வீடு வீடாகச் சென்று சட்டங்கள் குறித்து விளக்கப்படுகிறது. குறிப்பாக, மக்கள் நீதிமன்றம் மூலம் மனுக்களுக்கு தீர்வு காண்பது, சமரச தீர்வு மையம் மூலம் வழக்குகளை முடித்து வைப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. நிகழ்ச்சியில், நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதரன், சார்பு நீதிபதி ஸ்ரீதர் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 27 Oct 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?