/* */

நீலகிரி அரசு ஐடிஐ மாணவர் சேர்க்கை : வரும் 30 -ஆம் தேதி வரை நீட்டிப்பு

இந்த வாய்ப்பை பயன்படுத்தி உப்பட்டியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பழங்குடியின மாணவர்கள் சேரலாம்

HIGHLIGHTS

நீலகிரி  அரசு  ஐடிஐ மாணவர் சேர்க்கை :  வரும் 30 -ஆம் தேதி வரை நீட்டிப்பு
X

பைல் படம்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் நடப்பாண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை வருகிற 30-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

14 வயது பூர்த்தி அடைந்த ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். அதில், ஆண்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 40. பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. குன்னூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பொருத்துநர், கடைசலர், கம்மியர் ஆகிய ஈராண்டு தொழிற்பிரிவுகளுக்கும், 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் கம்பியாள் இரண்டாண்டு தொழிற்பிரிவுக்கும், தச்சர் மற்றும் பற்ற வைப்பவர் ஆகிய ஓராண்டு தொழிற்பிரிவுகளுக்கும் அனைத்து பிரிவினை சார்ந்த மாணவர்கள் பயிற்சியில் சேரலாம்.மேலும், பழங்குடியினருக்காக இயங்கும் உப்பட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவ- மாணவிகள் சேரலாம்.

இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 0423-2231759, 0426-2263449 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Updated On: 14 Oct 2021 12:11 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’