/* */

வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லும் பொருட்கள் தயார்படுத்தும் பணி தீவிரம்

நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லும் பொருட்கள் தயார்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லும் பொருட்கள் தயார்படுத்தும் பணி தீவிரம்
X

உதகை நகராட்சியில் தேர்தல் பொருட்களை பிரித்து அடுக்கும் பணி அலுவலக கவுன்சில் அரங்கில் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் வாக்களிக்க 406 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது.

4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு 491 வாக்குப்பதிவு எந்திரங்கள், 491 கட்டுப்பாட்டு எந்திரங்கள் ஒதுக்கப்பட்டது.

வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

உதகை நகராட்சியில் மொத்தம் உள்ள 82 வாக்குச்சாவடிகள் வாரியாக தேர்தல் பொருட்களை பிரித்து அடுக்கும் பணி அலுவலக கவுன்சில் அரங்கில் நடைபெற்றது.

தேர்தலுக்கு தேவையான பொருட்கள் தரையில் குறிக்கப்பட்ட வாக்குச்சாவடி என் வரிசையில் அடுக்கி வைக்கப்பட்டது.

வாக்குச்சாவடி தலைமை அலுவலர் தேர்தல் விவர குறிப்பேடு, முகவர்களுக்கு நுழைவு அனுமதி சீட்டு, அழியாத மை குப்பிகள், பென்சில், குண்டூசிகள், முத்திரை அரக்கு உள்பட 80 பொருட்கள் தேர்தலுக்கு பயன்படுத்தப்படுகிறது.

Updated On: 12 Feb 2022 2:24 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  2. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  4. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  5. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  6. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  7. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  8. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...
  9. வீடியோ
    பொண்ண பணத்துக்காக ஏமாத்தி சீரழிச்சான் | Perarasu கிளப்பிய சர்ச்சை...
  10. க்ரைம்
    ஜெயக்குமார் கொலையா? தற்கொலையா? தென்மண்டல போலீஸ் ஐஜி பரபரப்பு பேட்டி