/* */

உதகையில் முக கவசம் வழங்கி சுயேட்சை வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

அனைவரும் அரசு விதித்துள்ள கொரோனா வழி நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று உணர்த்துவதற்காகவே விழிப்புணர்வோடு வேட்பு மனு.

HIGHLIGHTS

உதகையில் முக கவசம் வழங்கி சுயேட்சை வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்
X

 உதகை நகராட்சியில் 31 வது வார்டு பகுதியில் போட்டியிட உள்ள சுயேச்சை வேட்பாளர் அசோக் குமார் முக கவசம் வழங்கி வேட்புமனு தாக்கல் செய்தார்.

உதகையில் பொதுமக்களுக்கு முக கவசங்கள் கொடுத்தும் வேட்பு மனு தொகையான 1000 ரூபாயை நாணயங்களாக கொடுத்து வித்தியாசமான முறையில் வேட்பு மனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர் கவனத்தை ஈர்த்தார்.

உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகள் பதினோரு பேரூராட்சிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த இருபத்தி எட்டாம் தேதி முதல் தொடங்கியது.

இந்நிலையில் உதகை நகராட்சியில் 31 வது வார்டு பகுதியில் போட்டியிட உள்ள சுயேச்சை வேட்பாளர் அசோக் குமார் என்பவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தபோது பொதுமக்களுக்கு முக கவசங்கள் வழங்கி வேட்பு மனு தொகையான 1000 ரூபாயை நாணயங்களாக கொண்டு வந்து வித்தியாசமான முறையில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

நோய் தொற்று காலம் என்பதால் அனைவரும் அரசு விதித்துள்ள வழி நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று உணர்த்துவதற்காகவே முகக் கவசம் வழங்கி விழிப்புணர்வோடு வேட்புமனு தாக்கல் செய்ததாக சுயேட்சை வேட்பாளர் அசோக்குமார் கூறினார்.

Updated On: 3 Feb 2022 9:54 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  4. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
  5. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  6. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  7. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  8. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  9. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக் கூட்டம்
  10. ஈரோடு
    ஈரோடு வந்த ரயிலில் கிடந்த 9.250 கிலோ கஞ்சா பறிமுதல்