/* */

ஊட்டியில் கூட்டுறவு நிறுவனத்தில் ரூ. 45 லட்சம் முறைகேடு

ஊட்டியில் கூட்டுறவு நிறுவனத்தில் நடந்த, 45 லட்சம் ரூபாய் முறைகேடு குறித்து, கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஊட்டியில் கூட்டுறவு நிறுவனத்தில் ரூ. 45 லட்சம் முறைகேடு
X

ஊட்டியில் கூட்டுறவு நிறுவனத்தில், 45 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளது.

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள, நீலகிரி கூட்டுறவு நிறுவனம் கட்டுப்பாட்டில் மாவட்டம் முழுவதும், 30க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. 'கொரோனா' காலகட்டத்தில், ரேஷன் கடைகள், ஊட்டி பல்பொருள் அங்காடிக்கு பிற இடங்களில் இருந்து பொருட்கள் வாங்கி 'பேக்கிங்' செய்து விற்பனை செய்யப்பட்டது.

அப்போது, ஊட்டி கூட்டுறவு நிறுவனத்தில் பணிபுரிந்த விற்பனை பிரிவு ஊழியர் ரவி, முறைகேடு செய்துள்ளார்; பொருட்களை வினியோகம் செய்த பலருக்கு, இன்னும் பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை என உயர் அதிகாரிகளுக்கு புகார் வந்தது. தொடர்ந்து நடந்த ஆய்வின் போது, முறைகேடு நடந்திருப்பது உறுதியானது.

கூட்டுறவு நிறுவனத்தில் விற்பனை பிரிவில் நடந்த ஆய்வில், 45 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்தது தெரியவந்ததால், அங்கு பணிபுரிந்த ரவி என்பவர், சஸ்பெண்ட் செய்யப்பட்டு, துறை ரீதியாக விசாரணை நடந்து வருகிறது. மோசடி பணத்திற்காக, 30 லட்சம் ரூபாய், 15 லட்சம் ரூபாய் என, இரண்டு காசோலைகளை அவர் கொடுத்த நிலையில், அவை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி உள்ளது. இது தொடர்பாகவும், கூட்டுறவு நிறுவனம் சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக, கூட்டுறவு நிறுவன நிர்வாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Updated On: 8 Sep 2022 8:25 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    மின்சாரம்,குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் சாலை மறியல்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  3. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  4. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  5. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100...
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  8. நாமக்கல்
    மோகனூர், பரமத்தி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு
  9. ஈரோடு
    பவானி பகுதியில் 15 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல்
  10. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை