/* */

நீலகிரி ஆட்சியர் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

பட்டா மாற்றம் தொடர்பாக வரும் 3 ம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

நீலகிரி ஆட்சியர் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு
X

நீலகிரி மாவட்ட கலெக்டர் எஸ்.பி.அம்ரித்.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் எஸ்.பி.அம்ரித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாகளுக்கு உட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் பிரதி வாரம் புதன் மற்றும் வெள்ளிக்கிழமை அன்று கிராம அளவில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி 01.12.21 (புதன்கிழமை) ஊட்டி தாலுகாவுக்கு உட்பட்ட கூக்கல் இயற்கை வேளாண்மை உற்பத்தி குழு கட்டிடத்தில் வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, குந்தா தாலுகா பாலகொலா சமுதாய கூடத்தில் உதவி ஆணையர் (கலால்) மணி, குன்னூர் தாலுகா காட்டேரி சமுதாய கூடத்தில் சப்-கலெக்டர் தீபனா விஷ்வேஸ்வரி, கோத்தகிரி தாலுகா கக்குலா சமுதாய கூடத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் பூபதி, கூடலூர் தாலுகா பார்வுட் பஞ்சாயத்து ஒன்றிய துவக்கப்பள்ளியில் வருவாய் கோட்டாட்சியர் சரவணக்கண்ணன் ஆகிய அலுவலர்கள் முன்னிலையில் பட்டா மாற்றம் தொடர்பான மனுக்கள் பெறப்படுகிறது. அதேபோல் 3-ம் தேதி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Updated On: 30 Nov 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  2. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  5. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  7. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...
  8. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் கவிதைகள்...!
  10. லைஃப்ஸ்டைல்
    காதலுக்கு எல்லைகளோ, தூரங்களோ கிடையாது !