/* */

உதகையில் தொடரும் உறைபனியால் கடும் குளிர்: வீடுகளில் மக்கள் முடக்கம்

உதகை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் கடந்த 2 நாட்களில் இன்று கடும் உறைபனி நிலவுகிறது.

HIGHLIGHTS

உதகையில் தொடரும் உறைபனியால் கடும் குளிர்: வீடுகளில் மக்கள் முடக்கம்
X

உதகை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உறை பனியால்,  புல் மைதானங்கள் மீது வெள்ளைக் கம்பளம் போர்த்தியது போல் உறைபனி காணப்பட்டது .

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் செப்டம்பரில் துவங்கும் பனி காலம், ஜனவரி பிப்ரவரி மாதங்களில் கடுமையாக காணப்படும். இந்த ஆண்டு சற்று தாமதமாக பனிக்காலம் தொடங்கி இருந்தாலும், தற்போது அனைத்து பகுதியிலும் உறைபனியின் தாக்கம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக உதகை நகரில் உள்ள நீர்நிலைகள் புல் மைதானங்கள் மீது படர்ந்து இருக்கும் உறை பனி, வெள்ளைக் கம்பளம் போர்த்தியது போல் காட்சியளிக்கிறது இதனால் உதகை நகரில் பல பகுதிகள் குட்டி காஷ்மீர் போல் காணப்படுகிறது.

உதகை நகரில் உதகை அரசு தாவரவியல் பூங்கா குதிரைப்பந்தைய மைதானம் காந்தள் தலைக்குந்தா, எமரால்ட் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான உறைபனி காணப்படுகிறது. நீர்நிலைகளில் இருந்து வெளியேறும் உறை பனி, புகை போல காட்சியளிக்கிறது.

உறைபனியால், அதிகாலை வேலையில் பணியை மேற்கொள்ளும் தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட பலரும் வீடுகளில் முடங்கினர். கடந்த இரண்டு நாட்களில், உதகையில் 1.8. டிகிரி செல்சியஸ்ஸாக கொட்டி வரும் உறை பனி, தற்போது பூஜை டிகிரி செல்சியசுக்கு நெருங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 25 Jan 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...