/* */

பள்ளிக்கு புதிய கட்டிடம்: குறைதீர் நாளில் உதகை கலெக்டரிடம் கோரிக்கை

நீலகிரி மாவட்டம், கூடலூர் மரப்பாலம் பகுதியில் பழுதடைந்த பள்ளியின் மேற்கூரையை சரி செய்யக்கோரி மக்கள் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

பள்ளிக்கு புதிய கட்டிடம்: குறைதீர் நாளில் உதகை கலெக்டரிடம் கோரிக்கை
X

கோப்பு படம் 

உதகையில், நீலகிரி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் கூடலூர் மரப்பாலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் செயல்படும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பள்ளி மேற்கூரை பழுதடைந்து இடிந்து விழுவதால் புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், மரப்பாலம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் 43 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் பள்ளி கட்டிடம் கடந்த 2003-ம் ஆண்டு கட்டப்பட்டது. அந்த கட்டிடம் தரமாக கட்டப்படாததால் மழைக்காலங்களில் கூரையின் மேல் நீர்தேக்கம், நீர் கசிவு ஏற்பட்டு வந்தது. தற்போது மேற்கூரை இடிந்து விழுந்து வருகின்றன.

கட்டிடத்தின் சுவரில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால் கட்டித்தை இடிக்க கலெக்டர் வாய்மொழி உத்தரவின் படி மாணவர்களின் நலன் கருதி மாணவர்கள் மாற்றுகட்டிடம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மாணவர்கள் அருகே உள்ள பள்ளிக்கு சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் சென்று பயிலும் நிலை உள்ளது.

அந்த கட்டிடமும் பழுதடைந்து உள்ளது. இதனால் நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த முடியாத நிலை இருக்கிறது. மரப்பாலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

Updated On: 29 March 2022 12:00 AM GMT

Related News

Latest News

  1. நீலகிரி
    ஊட்டியில் மலர் கண்காட்சி நாளை தொடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்
  2. இந்தியா
    விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்...
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. நாமக்கல்
    எஸ்.வாழவந்தி செல்லாண்டியம்மன் கோயில் தேர்த்திருவிழா: திரளான பக்தர்கள்...
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. தேனி
    அரசு மருத்துவமனையின் அவலம்! இங்கில்ல… மத்திய பிரதேசத்தில்…!
  7. தேனி
    அம்பானி, அதானியிடம் இருந்து எவ்வளவு பணம் வாங்கினீர்கள்? பிரதமர்...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. திருவண்ணாமலை
    இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில் நிலம் மீட்பு!
  10. இந்தியா
    சபரிமலையில் 'ஸ்பாட் புக்கிங்' வசதி ரத்து!