/* */

உதகை தனியார் விடுதியில் திடீர் தீ விபத்து-போலீசார் விசாரணை

தீ விபத்து குறித்து உதகை பி 1 காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

HIGHLIGHTS

உதகை தனியார் விடுதியில் திடீர் தீ விபத்து-போலீசார் விசாரணை
X

உதகையில் ஏற்பட்ட தீயை போராடி அணைத்த தீயணைப்புத் துறையினர். 

நீலகிரி மாவட்டம் உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியின் மேல் தளத்தில் இன்று காலை திடீரென தீ ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த விடுதியில் தங்கியிருந்த நபர்கள் உடனடியாக தங்கும் விடுதியை விட்டு வெளியேறினர்.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீர் பாய்ச்சி விரைவாக தீயை அனைத்தனர். மேலும் மேல் தளத்தில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர்களை தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு தங்கும் விடுதியில் இருந்து உடனடியாக அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

தீவிபத்தில் 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது. தீ விபத்து குறித்து உதகை பி 1 காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 3 March 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  2. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  3. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  5. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  6. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  7. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  9. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  10. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி