/* */

உதகையில் உரம் தராததால் முற்றுகையிட்ட விவசாயிகள்

விவசாயிகளுக்கு விரைந்து உரங்கள் வழங்க வேண்டும். இல்லையென்றால் 25 சதவீத தொகையை திரும்ப வழங்க வேண்டும் என கோரிக்கை.

HIGHLIGHTS

உதகையில் உரம் தராததால்  முற்றுகையிட்ட விவசாயிகள்
X

உதகை, என்.சி.எம்.எஸ். அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் 60,000 விவசாயிகள் மலை காய்கறி விவசாயம் செய்து வருகின்றனர். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. அதில் 25 சதவீத தொகையில் என்.சி.எம்.எஸ்.சில் இடுபொருள்கள் வாங்க வேண்டும்.

விவசாயிகளுக்கு இதுவரை உரங்கள் வழங்கப்படவில்லை. இன்று உதகை சேரிங்கிராசில் உள்ள என்.சி.எம்.எஸ். அலுவலகத்துக்கு உரங்கள் வாங்க விவசாயிகள் வந்தனர். கலப்பு உரம் இருப்பு இல்லாததால் வழங்கப்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர். இதனால் சோலூர், தேனாடுகம்பை, கோடப்பமந்து போன்ற இடங்களில் வந்த விவசாயிகள் என்.சி.எம்.எஸ். அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, மலை காய்கறிகளுக்கு கலப்பு உரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 4 மாதங்களுக்கு மேல், கலப்பு உரம் வழங்காததால் காய்கறி பயிர்களுக்கு உரம் இடும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது. விவசாயிளுக்கு விரைந்து, உரங்கள் வழங்க வேண்டும். இல்லையென்றால் 25 சதவீத தொகையை திரும்ப வழங்க வேண்டும் என்றனர்.

Updated On: 11 March 2022 12:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  2. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  3. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  7. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  8. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  9. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...
  10. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்