/* */

உதகை: முன்களப்பணியாளர்களுக்கு உணவு வழங்கும் விவசாய தம்பதி!

உதகையில், ஊரடங்கு காலத்தில் முன்கள பணியாளர்களுக்கு விவசாய தம்பதியினர் உணவு வழங்கினர்.

HIGHLIGHTS

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. எனினும், மருத்துவம், சுகாதாரம், காவல்துறை உள்ளிட்டவற்றை சேர்ந்த முன்களப் பணியாளர்கள், தொற்று அபாயத்திற்கு மத்தியில், ஊரடங்கு காலத்திலும் பணியாற்றி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் உதகை , மஞ்சூர், எமரால்டு ,எம். பாலாடா, தலைகுந்தா உள்ளிட்ட பல பகுதிகளில் ஊரடங்கு காலத்தில் சுமார் 300 க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு, நஞ்சநாடு ஊராட்சி போர்த்தியாடா பகுதியை சேர்ந்த செல்வரத்தினம் - சந்தான லட்சுமி தம்பதியர், உணவு வழங்கினர்.

ஊரடங்கு காலத்தில் தங்களின் உடல் நலனை பொருட்படுத்தாமல், பொதுமக்களுக்காக பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்களுக்கும் அதேபோல் நகரப் பகுதிகளை தூய்மையாக பேணிக்காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுக்கும் உணவுகள் வழங்கியது, தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், ஊரடங்கு முடியும் வரை உணவு வழங்க இருப்பதாகவும், விவசாயி தம்பதியினர் தெரிவித்தனர்.

Updated On: 5 Jun 2021 1:28 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  2. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  3. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  4. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  5. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  6. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  7. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  8. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    நண்பர்களின் பிறந்தநாளுக்கு நகைச்சுவையான தமிழ் வாழ்த்துக்கள்!
  10. வீடியோ
    வாழ்நாளில் தோல்வியே சந்திக்காத பயணம்எதனால இது சாத்தியமாகிறது?#modi...