/* */

கவுரவ விரிவுரையாளருக்கு கொரோனா: உதகை அரசு கலைக் கல்லூரி மூடல்

அரசு கலைக்கல்லூரி மூடப்பட்டு, மாணவ-மாணவிகள் கல்லூரிக்கு வருகை தர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கவுரவ விரிவுரையாளருக்கு கொரோனா: உதகை அரசு கலைக் கல்லூரி மூடல்
X

தூய்மைபடுத்ததும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்.

உதகை அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் மற்றும் நேரடியாக நடந்து வருகிறது. இந்த பணியில் ஈடுபட்ட வணிகவியல் பாடப்பிரிவு கவுரவ விரிவுரையாளர் ஒருவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர் உதகை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், தொற்று பாதிப்பு உறுதியானது.

தொடர்ந்து தடுப்பு நடவடிக்கையாக உதகை அரசு கலைக்கல்லூரி மூடப்பட்டு, மாணவ-மாணவிகள் கல்லூரிக்கு வருகை தர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் என மொத்தம் 153 பேரிடம் இருந்து சுகாதார குழுவினர் மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

பரிசோதனை முடிவு வரும் வரை 2 நாட்கள் மாணவ-மாணவிகளுக்கு இளங்கலை 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு, முதுகலை இரண்டாமாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகிறது.

Updated On: 28 Sep 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க