/* */

ஒலிபெருக்கி மூலம் கொரோனா விழிப்புணர்வு - உதகை காவல்துறை அசத்தல்!

உதகை நகரின் முக்கிய வீதிகளில், வாகனங்கள் மூலம் கொரோனா பாதுகாப்பு குறித்துபோலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

உதகையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதேபோல், காவல்துறையினரும் விழிப்புணர்வை மேற்கொண்டு வருகின்றனர்.

அவ்வகையில், உதகை காபி ஹவுஸ் சந்திப்பில் காவல்துறை மூலம் கொரோனா தடுப்பு பாதுகாப்பு குறித்து, ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். விழிப்புணர்வு நிகழ்வின்போது, முகக்கவசம் இல்லாமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனர். அதேபோல், நகரில் திறக்கப்பட்டுள்ள கடைகளில் சமூக இடைவெளி இல்லாமல் கட்டுப்பாடுகளை மீறி வாடிக்கையாளர்களை அனுமதித்த கடைக்காரர்களுக்கு, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பி ஜனார்தனன், டிஎஸ்பி மகேஸ்வரன், ஆய்வாளர்கள் ராஜன் பாபு, கண்மணி, ராஜேஷ்வரி, உதவி ஆய்வாளர்கள் விஜய் சண்முகநாதன், செந்தில் குமார், நிக்கோலஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

Updated On: 10 Jun 2021 8:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!